பதிவு செய்த நாள்
22 ஏப்2018
01:58
நாக்பூர்: ‘‘ஒரே படிவத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை, 3 – -6 மாதங்களில் அமலாகும்,’’ என, மத்திய நிதித் துறை செயலர், ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.தற்போது, வணிக நிறுவனங்கள், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 1, ஜி.எஸ்.டி.ஆர்., – 2, ஜி.எஸ்.டி.ஆர்., – 3’ என, மூன்று படிவங்களில், மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்கின்றன. இதனால், ஒரு நிறுவனம், ஆண்டுக்கு, 32 முறை, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.இது, வணிகர்களின் வேலைப் பளுவை அதிகரித்துள்ளதுடன், கணக்கு தாக்கலுக்கு கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கும் ஆளாக்கியுள்ளது.கணக்கு தாக்கலில் நேரும் தவறுகளால், பொருட்கள்கொள்முதல் மற்றும் விற்பனையில், செலுத்திய மற்றும் வசூலித்த வரி விபரங்கள், பொருந்தாமல், வணிகர்கள், உள்ளீட்டு வரியை பெறுவதில் சிக்கல் நேர்கிறது.இந்த பிரச்னைகள் குறித்து, கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அப்போது, வரி செலுத்தி, கணக்கு தாக்கல் செய்யாதவருக்கு, தற்காலிகமாக வழங்கும் உள்ளீட்டு வரியை நிறுத்தி வைப்பது அல்லது வரியை திரும்ப அளித்து, 3 – -4 மாதங்களுக்குள், கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், வரித் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்வது என்ற, இரு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.இவற்றில் ஒரு திட்டத்தை ஏற்று, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதை எளிமையாக்குவது என, சமீபத்தில் நடைபெற்ற, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இது குறித்து, ஹஷ்முக் ஆதியா கூறியதாவது:வணிக நிறுவனங்கள், இனி, மாதந்தோறும், ஒரே படிவத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகமாக உள்ளது. அடுத்த, 3 -– 6 மாதங்களில், இத்திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் உள்ள சிக்கல்கள் முடிவுக்கு வரும். வணிகர்களும், நிறுவனங்களும், மிக எளிமையாக கணக்கு தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|