பதிவு செய்த நாள்
22 ஏப்2018
01:59
நாமக்கல்: தினமும், 15 லட்சமாக இருந்த முட்டை ஏற்றுமதி, விலை உயர்ந்து வருவதன் காரணமாக, ஐந்து லட்சமாக குறைந்துள்ளதால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்ற நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007 – 08ல், பக்ரைன், குவைத் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளுக்கும், மாதந்தோறும், 12 கோடி முதல், 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இந்நிலையில், ஆறு மாதங்களாக இருந்த காலாவதியை, மூன்று மாதங்களாக குறைத்ததால், இந்திய முட்டை ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளின் நிர்ப்பந்தத்தால், வளைகுடா நாடுகளுக்கு ஆறு ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2017 நவ., 16ல், வரலாறு காணாத வகையில், முட்டை கொள்முதல் விலை, 516 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதால்,ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதையடுத்து, கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து, மார்ச், 26ல், 335 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதால், ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்தது. தற்போது, கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் ஏற்றுமதி சரிந்துள்ளது.இது குறித்து, கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் கூறியதாவது:இந்திய முட்டைகளுக்கு வரவேற்பு இருந்ததால், ஏற்றுமதி அதிகரித்தது. விலை உச்சத்தை தொட்டபோது, ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. படிப்படியாக விலை குறைந்ததால், ஏற்றுமதியும் அதிகரித்தது.தற்போது, மீண்டும் விலை உயர்ந்து வருவதால், ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினமும், 15 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஐந்து லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும், இந்திய விலை உயர்வை காட்டி, வெளிநாடுகளில், முட்டை கொள்முதல் விலை குறைத்து, வினியோகம் செய்வதால், இந்திய.ே முட்டைக்கு ஆர்டர் குறைந்துள்ளது. அதுவும், ஏற்றுமதி வீழ்ச்சியடைய காரணமாகும். ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு வழங்கிய போக்குவரத்து மானியமும் நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|