கமாடிட்டி சந்தை நிலவரம்கமாடிட்டி சந்தை நிலவரம் ... பங்குச்சந்தைகளில் ஏற்றம் பங்குச்சந்தைகளில் ஏற்றம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை: உரு­வெ­டுக்­கும் புதிய பொரு­ளா­தார சூழல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
00:53

பங்­குச் சந்தை, தொடர்ந்து சரிவை சந்­திக்­கும் என்று, மார்ச் மாதத்­தில் நில­விய பர­வ­லான எதிர்­பார்ப்பு, ஏப்­ரல் மாதத்­தில் பொய்த்­த­தா­கவே தோன்­று­கிறது. சந்­தை­யின் குறு­கிய கால போக்கை யாரா­லும் சரி­யாக கணிக்க முடி­யாது என்­ப­தையே, சந்­தை­யின் இந்த நகர்வு மீண்­டும் நிரூ­பிக்­கிறது.

இதை முத­லில் ஏற்­ப­தும், அந்த ஏற்­பின் அடிப்­ப­டை­யில், நம் முத­லீட்டு முடி­வு­களை எடுப்­பதை குறிக்­கோ­ளாக அமைத்­துக் கொள்­வ­தும் நல்­லது.நெடுங்­கால மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் பொரு­ளா­தார நகர்­வு­க­ளின் மேல், நம் முழு கவ­ன­மும் இருக்க வேண்­டிய தரு­ணம் இது. உலக சந்­தை­யில், கச்சா எண்­ணெய் தொடர்ந்து விலை ஏற்­றம் காண்­கிறது. இது, ரூபா­யின் மதிப்பை பாதிக்­கும். நாட்­டின் அன்­னிய செலா­வணி தேவை­க­ளைக் கூட்­டும். இது இறக்­கு­ம­திக்­கும், ஏற்­று­ம­திக்­கும் உள்ள இடை­வெ­ளியை அதி­க­ரிக்­கும்.

இத­னால், வர்த்­தக பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும். இது, ரூபா­யின் மதிப்பை குறைக்­கும். இந்த சூழ­லில், அர­சுக்கு இரண்டு சவால்­கள் உள்­ளன. ஒன்று, ஏற்­று­மதி பெருக்­கம் ஏற்­ப­டுத்­து­வது. இன்­னொன்று, இறக்­கு­ம­தியை கட்­டுக்­கோப்­பாக வைப்­பது.திறந்த முறை­யில் வர்த்­த­கம் நடத்­திய சூழல் மாறி, ஒரு­வித கட்­டுப்­பா­டான போக்கை கையெ­டுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் அர­சுக்கு வரும். இதை, சந்தை உணர்ந்து விட்­ட­தா­கவே தோன்­று­கிறது.ஐ.டி., நிறு­வன பங்­கு­கள் உச்­சம் தொடத் துவங்கி உள்­ளன. தொடர்ந்து ஏற்­று­ம­தி­யில் சிறக்­கும் நிறு­வன பங்­கு­களின் மதிப்பு கூடும். கச்சா எண்­ணெ­யை­யும், அதன் உப பொருட்­க­ளை­யும் நம்பி நடக்­கும் நிறு­வன பங்­கு­களும் சிக்­கல்­களை சந்­திக்­கும்.

எரி­பொ­ருள் நுகர்வு, மக்­க­ளின் சேமிப்பை குறைக்­கும். நிறு­வன நிகர லாப­மும் பாதிப்­புக்கு ஆளா­கும். இது, ஒரு புதிய பொரு­ளா­தார சூழல். 2014க்கு பின், இப்­போது தான் இந்த சூழல் உரு­வெ­டுத்­துஉள்­ளது. அனே­க­மாக, இந்த சூழல் தொடர வாய்ப்பு அதி­கம் என்றே தோன்­று­கிறது. அப்­படி தொடர்ந்­தால், சந்­தை­யில் அதன் தாக்­கம் பற்றி இன்­னும் தெளி­வான புரி­தல் ஏற்­பட வேண்­டும். அதற்கு சில காலம் ஆகும். மேலும், 2018 மார்ச் மாத ஆண்­டுக் கணக்­கு­கள் தணிக்கை முடிந்து, வெளி­வர துவங்கி உள்­ளன. அவை எதிர்­கால மாற்­றங்­களை பிர­தி­ப­லிக்­காது என்­பதை தெளி­வாக புரிந்து கொள்ள வேண்­டும்.

எதிர்­கால லாபப் போக்கை புதிய சூழ­லுக்கு ஏற்ப நிர்­ண­யிப்­பது, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை. இதை சிறக்க செய்­யவே, நம் முழு கவ­னத்­தை­யும் இப்­போது செலுத்த வேண்­டும்.பொரு­ளா­தார மாற்­றங்­கள் வேகம் பிடிக்­கும் சூழ­லில், அவற்றை எதிர்­பார்த்து, முன் நகர்­வு­களை எடுக்க வேண்­டிய கட்­டா­யம் நம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கிறது.அர­சு­கள் பற்­றாக்­குறை சுமையை எதிர்­கொள்ள வேண்­டிய சூழல் உரு­வா­கும். இதற்கு, நாட்­டின் வரி மேலாண்மை மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்சி வழி வகுக்க வேண்­டும். அந்த வகை­யில், நாம் ஒரு நல்ல இடத்­தில் இருக்­கி­றோம்.

நம் பொரு­ளா­தா­ரம் போகும் திசை சரி­யா­கவே தோன்­று­கிறது. கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக முன்­னெ­டுத்த சீர்­தி­ருத்­தங்­கள் அர­சுக்கு உத­வும். ஜி.எஸ்.டி., நாட்­டின் எதிர்­கால வளர்ச்­சிக்­கும், இடைக்­கால சவால்­களை எதிர்­கொள்­ள­வும் கைகொ­டுக்­கும். வரு­வாய் பெருக்­கம், வரி ஏய்ப்பு குறைப்பு ஆகிய நன்­மை­கள் தெளி­வாக அமை­யும்.ஆனால், அர­சுக்கு இருக்­கும் மிகப் பெரிய சவால், பண­வீக்­கம். ஒரு பக்­கம் அரசே வேளாண் விளை­பொ­ருட்­க­ளின் விலையை ஏற்ற வாக்­க­ளித்­துள்­ளது. இன்­னொரு புறம், பண வீக்­கத்­தை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம். இவற்­றின் அடிப்­படை முரணை அரசு எப்­படி கையாள்­கிறது என்று கூர்ந்து கவ­னிக்க வேண்­டும்.

இது, முத­லீட்­டா­ளர்­கள் முன்­னெ­டுக்க வேண்­டிய முயற்சி. இதைச் செய்­யா­மல், முத­லீட்டு முடி­வு­கள் எடுப்­பதை தவிர்க்க வேண்­டும். பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் மாற்­றங்­கள் நேரும் நேரத்­தில் நாம், சந்­தை­யின் சிறு மாற்­றங்­களை சார்ந்தே இருப்­ப­தும், வெறும் நிறு­வன பார்வை மட்­டும் கொண்டு நடப்­ப­தும் நல்­ல­தல்ல.எங்­கெல்­லாம் பாதிப்பு வருமோ, அந்த துறை மற்­றும் நிறு­வன பங்­கு­களை தவிர்ப்­ப­தும், விற்­ப­தும் அவ­சி­யம். குறி­யீடு மற்­றும் ஆவ­ணச் சான்று இல்­லா­மல், இத்­த­கைய முடிவை எடுக்க வேண்­டிய சூழல் விரை­வில் உரு­வா­க­லாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)