பதிவு செய்த நாள்
24 ஏப்2018
03:38
புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம், நேற்று, 1,000 கோடி டாலரை தாண்டியது.இதன் மூலம், இச்சாதனை புரிந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெற்றுள்ளது.ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை, அதன் சந்தை விலையில் பெருக்கினால் கிடைக்கும் தொகை, சந்தை மூலதனம் ஆகும்.மும்பை பங்குச் சந்தையில், டி.சி.எஸ்., பங்கு விலை, இறுதி வர்த்தக நாளான, கடந்த வெள்ளியன்று, ஓராண்டில் இல்லாத வகையில், 6.76 சதவீதம் உயர்ந்து, 3,406.40 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம், 1,000 கோடி டாலர், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், 6,52,083 கோடியை எட்ட, 7,917 ரூபாய் தேவை என்ற நிலையில், கடந்த வார வர்த்தகம் முடிந்தது.இவ்வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, மும்பை பங்குச் சந்தையில், வணிகத்தின் இடையே, டி.சி.எஸ்., பங்கு விலை, 4.39 சதவீதம் உயர்ந்து, 3,557 ரூபாயாக அதிகரித்தது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம், முதன் முறையாக, 1,000 கோடி டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இது, ரூபாய் மதிப்பில், 6,80,912 கோடியாகும்.பிற்பகலில், பங்கு விலையில் சரிவு ஏற்பட்டது. எனினும், வர்த்தகத்தின் இறுதியில், டி.சி.எஸ்., பங்கின் விலை, 0.26 சதவீத ஏற்றத்துடன், 3,415.20 ரூபாய் என்ற அளவில் நிலை கொண்டது.டி.சி.எஸ்., அதன் பொன்விழாவை முன்னிட்டு, ஒரு பங்கிற்கு, ஒரு பங்கு வீதம் போனஸ் அளிக்கிறது. கடந்த நிதியாண்டிற்கு, இந்நிறுவனத்தின் மொத்த டிவிடெண்டு அளிப்பு, 50 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.டாப் – 5
சந்தை மூலதனத்தில், டி.சி.எஸ்., நிறுவனத்தை அடுத்த நான்கு இடங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., – ஐ.டி.சி., இந்துஸ்தான் லீவர் நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|