87 லட்சம் புதிய சந்தாதாரர்கள் வளைத்தது, ‘ரிலையன்ஸ் ஜியோ’87 லட்சம் புதிய சந்தாதாரர்கள் வளைத்தது, ‘ரிலையன்ஸ் ஜியோ’ ... கருப்பட்டி சீசன் துவக்கம் கருப்பட்டி சீசன் துவக்கம் ...
வங்கி ஏ.டி.எம்., பரிவர்த்தனைக்கு வரி; சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு, ‘கிடுக்கிப்பிடி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2018
00:56

புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்­டு­களில், சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளித்த இல­வச சேவை­க­ளுக்கு, வரி செலுத்­து­மாறு வங்­கி­க­ளுக்கு, மத்­திய வரித் துறை, ‘நோட்­டீஸ்’ அனுப்­பி­யுள்­ளது. பொது மற்­றும் தனி­யார் துறை வங்­கி­கள், அவற்­றின் வர்த்­தக வளர்ச்­சிக்­காக, சிறப்பு பிரி­வைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பல சலு­கை­கள் வழங்­கு­கின்றன.

கட்டணம் :
குறிப்­பிட்ட காலத்­திற்கு பெருந்­தொ­கையை, ‘டிபா­சிட்’ செய்­வோர்; வங்கி சேமிப்பு கணக்­கில், லட்­சம் ரூபாய்க்கு மேல் குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிப்­போர் போன்­ற­வர்­களை, வங்­கி­கள் சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்தி, தனி கவ­னம் செலுத்­து­கின்றன. நிர்­ண­யித்­த­தற்கு மேற்­பட்ட, ஏ.டி.எம்., பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, சாதா­ரண வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கி­கள், சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அது­போல வசூ­லிப்­ப­தில்லை.

மேலும், சாதா­ரண வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் காசோலை புத்­த­கம், ‘டெபிட் கார்டு’ உள்­ளிட்ட சேவை­க­ளுக்கு கட்­ட­ணம் வசூ­லிக்­கும் வங்­கி­கள், சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இச்­சே­வை­களை இல­வ­ச­மாக அளிக்­கின்றன. வங்­கிக் கணக்­கில், குறிப்­பிட்ட இருப்­புத் தொகையை பரா­ம­ரிப்­ப­தற்­காக இந்த இல­வ­சங்­கள் வழங்­கப்­ப­டு­கின்றன. வங்­கி­கள் வழங்­கும் இது போன்ற சேவை­கள் அல்­லது வாடிக்­கை­யா­ளர்­கள் பெறும் பயன்­கள், சேவை­கள் வரிச் சட்­டப்­படி, ‘மதிப்­பு­மிகு சேவை’ ஆக கரு­தப்­ப­டு­கிறது.

உத்தரவு :
வங்­கி­கள் இத்­த­கைய சேவை­களை இல­வ­ச­மாக அளித்­தா­லும், அச்­சே­வை­க­ளுக்கு வரி செலுத்த வேண்­டும் என, சேவை வரிச் சட்­டம் கூறு­கிறது. சாதா­ரண வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம், ஏ.டி.எம்., பரி­வர்த்­த­னை­கள், குறைந்­த­பட்ச இருப்பு இல்­லா­தது, எஸ்.எம்.எஸ்., சேவை போன்­ற­வற்­றுக்கு, கட்­ட­ணத்­து­டன் சேவை வரி­யும் வங்­கி­கள் வசூ­லிக்­கின்றன.

ஆனால், சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, இதே சேவை­களை இல­வ­ச­மாக வழங்­கு­வ­து­டன், வரி­யும் வசூ­லிக்­கா­மல் உள்ளன. எனவே, ‘சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கும், ஏ.டி.எம்., பரி­வர்த்­த­னை­கள், காசோலை, டெபிட் கார்டு உள்­ளிட்ட சேவை­க­ளுக்கு, வரி செலுத்த வேண்­டும்’ என, எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., உள்­ளிட்ட முன்­னணி வங்­கி­க­ளுக்கு, மத்­திய சரக்கு மற்­றும் சேவை­கள் வரி புல­னாய்வு பிரிவு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது குறித்து, இப்­பி­ரி­வின் மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ஐந்து ஆண்­டு­களில், வங்­கி­கள் சிறப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளித்த இல­வச சேவை­க­ளுக்­காக வரி செலுத்­து­மாறு, 'நோட்­டீஸ்' அனுப்­பப்­பட்­டு உள்­ளது. இதன்­படி வங்­கி­கள், 6,000 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக வரி செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். வங்­கிக் கணக்­கில், குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் வங்­கி­கள் வசூ­லித்த தொகை­யின் அடிப்­ப­டை­யில், செலுத்த வேண்­டிய வரி மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

அதிர்ச்சி:
இல­வச சேவை தொடர்­பான, வரி துறை­யின் அதி­ரடி உத்­த­ர­வால், வங்­கி­கள் அதிர்ச்சி அடைந்­துள்ளன. இது­வரை வழங்­கிய சேவை­க­ளுக்­காக, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் வரி வசூ­லிக்க முடி­யாது என்­ப­தால், இப்­பி­ரச்னை குறித்து, மத்­திய அர­சி­டம் முறை­யிட திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)