பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:45
சென்னை : இந்தாண்டு மாம்பழ சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து, சேலம், மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாம்பழ வகைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
தற்போது பங்கனப்பள்ளி, ஹிமாம்பசந்த், செந்துாரம் அதிகளவு வந்துள்ளன. அடுத்த ஒரு சில வாரத்தில் ருமானி, மல்கோவா உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகம் இருக்கும்.இந்தாண்டு உலகம் முழுவதும் உள்ள மாம்பழ பிரியர்கள், சேலம் மாம்பழ வகைகளை சுவைக்க, ஆன்லைனில் மாம்பழ விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு சேலம், பெங்களூரு போன்ற பகுதிகளில் மட்டுமே வரவேற்பு காணப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை நேரில் பார்த்து வாங்கவே மக்கள் விரும்புவர் என, மாம்பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, மாம்பழ வியாபாரி எஸ்.திருமாறன் கூறுகையில், ‘மற்ற பகுதிகளில் எப்படி இருந்தாலும், சென்னையை பொறுத்தவரை நேரில் பார்த்து வாங்குவதையே மக்கள் விரும்புவர். ஆன்லைனில், சுவை குன்றிய, பழுத்துப் போன பழங்கள் விற்க அதிக வாய்ப்புண்டு’ என்றார்.அடுத்த ஓரிரு நாட்களில் மாதவரம் மாம்பழ சந்தை கூடும். அப்போது ருமானி, பங்கனப்பள்ளி வகைகள் வரத்து அதிகரித்து, மாம்பழ விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|