பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:49
புதுடில்லி : ‘‘கிராமப்புற மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி முன்னேற்றத்திற்கு புதுமையான தீர்வுகளை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்,’’ என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: இந்தியா, புதுமையை வரவேற்கும் நாடு. வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கணினி செயல்பாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், ‘டேட்டா’ எனப்படும் தரவுகளின் ஆய்வுகள் தொடர்பான தீர்வுகளை கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மாறுபட்ட சிந்தனையில் தீர்வுகளை உருவாக்க வேண்டும். ‘டிஜிட்டல்’ பொருளாதாரத்திற்கு, அத்தகைய தேவைகள் அவசியம்.
ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் கல்வித் துறையில், செயற்கை நுண்ணறிவு, சாதனங்கள் இடையிலான இணைய தொடர்பு, இயந்திரங்களின் பரஸ்பர தகவல் பரிவர்த்தனை போன்ற புதிய தொழில்நுட்பங்களில், புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், தீர்வுகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|