பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:51
புதுடில்லி : மத்திய அரசு, உள்நாட்டு சில்லரை விற்பனை துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய சில்லரை விற்பனை கொள்கையை உருவாக்க உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும், தனி அமைச்சரவை ஏற்படுத்த வேண்டும், என, தொழில் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதையடுத்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தேசிய சில்லரை விற்பனை கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். சில்லரை வர்த்தகத்தை கண்காணிக்கும் பொறுப்பு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையிடம் உள்ளது. அதனால், இத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு, தேசிய சில்லரை விற்பனை கொள்கையை உருவாக்க, உயர்மட்டக் குழு அமைக்குமாறு, சுரேஷ் பிரபு கடிதம் எழுதியுள்ளார்.
இக்குழு, மாநில அரசுகள், தொழில் மற்றும் வணிக கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சகம், ஏற்கனவே, தேசிய மின்னணு வணிக கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்துடன், சில்லரை விற்பனை கொள்கையும் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|