பதிவு செய்த நாள்
04 மே2018
00:47
பழநி:ழநி பகுதியில் புளிய மரங்களில் விளைச்சல் குறைவால், மார்க்கெட்டில் புளியின் விலை அதிகரித்துள்ளது. பழநி சாலையோரங்கள், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன.இவற்றில் ஜனவரி – மே வரை புளிய மரங்களில் விளைச்சல் இருக்கும். இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது.இதனால், புளியின் விலை அதிகரித்துள்ளது. உழவர் சந்தை அருகே, 1 கிலோ விதை நீக்கப்படாதது, 80 – 100 ரூபாய் வரையும், தோலுடன் புளி, 1 கிலோ, 60 ரூபாய், தோல் நீக்கி, விதை நீக்கப்பட்டது கிலோ 80 – 130 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. ‘புளிக்கு போதிய விலை கிடைத்தாலும், விளைச்சல் இல்லாததால் லாபம் கிடைக்கவில்லை’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|