பதிவு செய்த நாள்
09 மே2018
03:07
தமிழ்நாடு சரக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 2017 – 18ம் ஆண்டு வருமானம், 2,510 கோடி ரூபாய் எனவும், இது, 2016 – 17ஐ விட, 429 கோடி ரூபாய் குறைவு எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொது துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர், பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக வருமானம் கிடைக்கிறது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், தமிழ்நாடு சரக தலைமை பொது மேலாளர், மார்ஷல் ஆண்டனி லியோ கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, தமிழகம் முழுவதும், 90 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களின், 2017 – 18ம் ஆண்டு மொத்த வருவாயாக, 1,710 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.
சென்னை சரக வருவாய் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சென்னை சரகத்தில், 2017 – 18ம் ஆண்டு வருவாய், 800 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2016 – 17ம் ஆண்டு, 911 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடும் போது இந்த ஆண்டு, 111 கோடி ரூபாய், வருவாய் குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருவாய் குறித்து, தமிழ்நாடு, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கத் தலைவர், செல்லப்பா கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு சரகத்தில், 2016 – 17ம் ஆண்டு வருவாய், 2,028 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, 1,710 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதற்கு, தனியார்மயக் கொள்கையும், பி.எஸ்.என்.எல்.,ல், ‘4ஜி’ சேவை இல்லாததும், முக்கிய காரணங்களாகும்.இவ்வாறு அவர் கூறினார்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|