பதிவு செய்த நாள்
09 மே2018
03:14
புதுடில்லி:மத்திய அரசு, ஜூன் முதல், தயாரிப்பு விலை பணவீக்க புள்ளி விபரத்தை, சோதனை அடிப்படையில் வெளியிட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, மொத்த விற்பனை விலை, சில்லரை விற்பனை விலை ஆகியவற்றின் அடிப்படையில், இரு வகை பணவீக்க விபரத்தை, மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.இவற்றின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் விலை, ஜி.எஸ்.டி.,யை உள்ளடக்கியதாக உள்ளது.எனவே, வரியின்றி, பொருட்களின் அடக்க விலை அடிப்படையில், தயாரிப்பு விலை பணவீக்கத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, ஒரு பொருள் அல்லது சேவையில், ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கும் தொகையில் ஏற்படும்
சராசரி மாற்றங்களின் அடிப்படையில், தயாரிப்பு விலை பணவீக்கம் கணக்கிடப்படும்.உதாரணமாக, ரயில்வேயில், பயண கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தின் அடிப்படையில், சராசரி கட்டண மாற்றம் கணிக்கப்படும். அதுபோல, வங்கித் துறையில், நேரடி சேவைகள் மற்றும் கட்டண சேவைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இந்த வகையில், சோதனை முயற்சியாக, வங்கி, துறைமுகம், அஞ்சல், காப்பீடு, போக்குவரத்து, விமான பயணம் உள்ளிட்ட, 10 சேவைகளை உள்ளடக்கிய, தயாரிப்பு விலை பணவீக்க புள்ளிவிபரம், ஜூன் முதல் மாதந்தோறும் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|