பதிவு செய்த நாள்
11 மே2018
00:44
சென்னை:சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தம், ஹூண்டாய் மோட்டர் நிறுவனம், ஆண்டுக்கு, 50 ஆயிரம் கார்களை, சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய வழி வகுக்கும். அத்துடன், துறைமுகத்தில், 20 நாட்களுக்கு, இலவசமாக கார்களை நிறுத்துவதற்கும், சரக்கு கப்பல்களில் முன்னுரிமை பெறவும் உதவும்.
மேலும், கப்பல் தளங்களுக்கான இரட்டை கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க, ஒப்பந்தம் வகை செய்கிறது. இது குறித்து, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், ‘‘சிறப்பான வசதி கொண்ட சென்னை துறைமுகத்தில், ஹூண்டாய் மோட்டார் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும், 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.
ஹூண்டாய் மோட்டார்இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஒய்.கே.கூ பேசுகையில், ‘‘சென்னை துறைமுகத்தில் இருந்து தான், முதன் முதலில் கார் ஏற்றுமதியை துவக்கினோம். ‘‘இந்தியாவில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, சிறந்த ஏற்றுமதியாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளோம்,’’ என, தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|