பதிவு செய்த நாள்
12 மே2018
00:30
‘இந்திய ஆடம்பர பொருட்கள் சந்தை, இந்தாண்டு, இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும்; இது வரும் ஆண்டுகளில், 25 – -30 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ‘கிரெடிட் சுயுஸ் வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், பெரும் பணக்கார குடும்பங்கள் தான், விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குகின்றன.
இருந்தபோதிலும், தற்போது மக்களின் செலவழிப்பு வருவாய் அதிகரித்து வருவதும், வாழ்க்கை பாணியில் ஏற்பட்டு வரும் மாறுதலும், ‘பிரீமியம்’ பிராண்டு பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை அளித்துள்ளன.மேலும், மத்திய அரசு, அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தியதன் காரணமாக, முதலீடுகள் மட்டுமின்றி, பன்னாட்டு பொருட்களும், சந்தையில் குவிந்து வருகின்றன.
இதனால், மக்களின் நுகர்வு கலாசாரம் மாறி வருகிறது. குறிப்பாக, இளைஞர்களிடம், ‘பிராண்டு’ பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் வசிக்கும், 130 கோடி பேரில், 65 சதவீதத்தினர் இளைஞர்கள் என்பதால், ஆடம்பர பொருட்களுக்கான சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இணைய வசதி, ஸ்மார்ட்போன் பயன்பாடு போன்றவற்றால், சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்களை உடனுக்குடன் அறிய முடிகிறது. இதனால், பிரீமியம் பொருட்களுக்கு வரவேற்பு காணப்படுகிறது.
மின்னணு சாதனங்கள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள், காலணிகள், வாகனங்கள் போன்றவை மட்டுமின்றி, நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட நுகர்பொருட்களிலும், பிராண்டுகளை பார்த்து வாங்கும் போக்கு உள்ளது.எனினும், பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் நுகர்வோர் சாதனங்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலை மாறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|