பதிவு செய்த நாள்
13 மே2018
00:06
புதுடில்லி:ரிலையன்ஸ் குழுமத்தின் ஆர்ஜியோ நிறுவனம், 'போஸ்ட் பெய்டு' கட்டணத்தை அதிரடியாக குறைத்ததால், 'ஏர்டெல், ஐடியா' உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என, ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்ஜியோ, 199 ரூபாய் கட்டணத்தில், புதிய போஸ்ட் பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், சந்தாதாரர்கள், பிணைத் தொகை எதுவுமின்றி இணையலாம்.வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., 25 ஜி.பி., டேட்டா சேவை ஆகிய வற்றை பெறலாம். நிமிடத்திற்கு, 50 பைசா கட்டணத்தில், வெளிநாடுகளுக்கு பேசலாம்.
மேலும், நிமிடத்திற்கு, 2 ரூபாய் கட்டணத்தில், சர்வதேச ரோமிங் வசதியும் கிடைக்கும். இந்த கவர்ச்சிகரமான திட்டம், 15 முதல் அமலுக்கு வருகிறது.இந்த போட்டியை சமாளிக்க, ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட போட்டி நிறுவனங்களும், போஸ்ட் பெய்டு கட்டணத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனங்கள் தற்போது, வெளிநாட்டு அழைப்புகளுக்கு, நிமிடத்திற்கு, 8 - -10 ரூபாய் வசூலிக்கின்றன. இதை குறைக்கும்பட்சத்தில், நிறுவனங்களின் வருவாய் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, சி.எல்.எஸ்.ஏ., நிறுவன ஆய்வாளர்கள் தீப்தி சதுர்வேதி, அக் ஷத் அகர்வால் கூறியதாவது:
ஆர்ஜியோவின் சர்வதேச அழைப்பு கட்டணம், தீவிர போட்டியை உருவாக்கும்.மொபைல் போன் சந்தாதாரர்களில், 5 சதவீதம் பேர் போஸ்ட் பெய்டு திட்டத்தில் உள்ளனர். பார்தி ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்களில், 5 -- 6 சதவீதம்பேர், போஸ்ட் பெய்டுதிட்டத்தில் உள்ளனர்.
இவர்கள், இந்நிறுவனங்களின் வருவாயில், 20 சதவீத பங்களிப்பை வழங்கு கின்றனர். அதனால், ஆர்ஜியோவுக்கு போட்டியாக, இந்நிறுவனங்கள் போஸ்ட் பெய்டு கட்டணங்களை குறைத்தால், அவற்றின் வருவாய் பாதிக்கும். மேலும், தொலைதொடர்பு சேவை துறையின், ஒரு நபர் வாயிலான சராசரி வருவாயும் குறையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.68,000 கோடி மிச்சம்
ஆர்ஜியோ, மொபைல் போன் சேவையை துவக்கியது முதல், போட்டியை சமாளிக்க, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும், கட்டணங்களை குறைத்துள்ளன. இந்த வகையில், இந்திய மொபைல் போன் சந்தாதாரர்களுக்கு, ஆர்ஜியோவால், 68 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|