பதிவு செய்த நாள்
13 மே2018
00:07
சேலம்:வட மாநில சர்க்கரை வரத்து அதிகரிப்பு, நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது ஆகியவற்றால், சர்க்கரை விலை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் குறைந்துள்ளது.
சேலம் மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க தலைவர், பெரியசாமி கூறியதாவது:மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை, வாரத்துக்கு, 120 லாரிகளில் வந்த சர்க்கரை, தற்போது, 250 லாரிகளாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் சர்க்கரையை பயன்படுத்துவோர், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டியை பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். சர்க்கரையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், சர்க்கரை விலை, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் குறைந்துள்ளது.சர்க்கரை முதல் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்றது, 31 ரூபாயாகவும்; இரண்டாம் ரகம், 33 ரூபாய்க்கு விற்றது, 30 ரூபாயாகவும் சரிந்துள்ளது. வட மாநில சர்க்கரை விலை, சரிவு ஏற்பட்டுள்ளதால், முண்டியம்பாக்கம் சர்க்கரை விலையும் சரிந்துள்ளது.
முண்டியம்பாக்கம் சர்க்கரை முதல் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்றது, 34 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 34 ரூபாய்க்கு விற்றது, 32 ரூபாயாகவும் சரிந்துள்ளது. வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சர்க்கரையின் விலை மேலும் குறையும்.இவ்வாறு கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|