பதிவு செய்த நாள்
15 மே2018
02:40
புதுடில்லி:‘நடப்பாண்டின், முதல் காலாண்டில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை, 11 சதவீதம் அதிகரித்து உள்ளது’ என, ‘இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:நடப்பாண்டின், ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, 11 சதவீதம் ஏற்றம் கண்டு, மூன்று கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 2.7 கோடியாக இருந்தது.இதில், சீனாவைச் சேர்ந்த, ‘ஜியோமி’ நிறுவனம், 30.3 சதவீத பங்குடன், முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ‘சாம்சங், ஒப்போ, விவோ, டிரான்சன்’ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக, ஸ்மார்ட் போன் விற்பனையில், ஜியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில், ஸ்மார்ட் போன் சந்தை தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டின், ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், ‘பியூச்சர் போன்’ சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ, 38.4 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.இதற்கடுத்த இடங்களில், சாம்சங், டிரான்சன், லாவா, மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|