பதிவு செய்த நாள்
15 மே2018
02:42
புதுடில்லி;‘பைன் ஆர்கானிக் மற்றும் தேவி சீ புட்ஸ்’ நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த, பைன் ஆர்கானிக் நிறுவனம், உணவு, பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பதப்படுத்த உதவும் சிறப்பு பொருட்களை தயாரிக்கிறது. கடந்த, 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, ஜே.எம்., பைனான்சியல் மற்றும் எடல்வைஸ் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தேவி சீ புட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 900 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனம், அதன் பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, ஆக்சிஸ் கேப்பிடல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், கோடக் மகிந்திரா கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களை அமர்த்தியுள்ளது.விரைவில் இந்த இரு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டு தேதியை அறிவிக்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|