மொத்த விலை பணவீக்கம் உயர்வுமொத்த விலை பணவீக்கம் உயர்வு ... மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீத வளர்ச்சி:'நோமுரா' நிறுவனம் ஆய்வறிக்கை வெளியீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீத வளர்ச்சி:'நோமுரா' நிறுவனம் ஆய்வறிக்கை ... ...
கூட்டுறவு தொழிற்சாலைகளில், ‘கோட்டா’ முறை அமல்:நாளொன்றுக்கு 3 லட்சம் கிலோ பசுந்தேயிலை வீண்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
02:47

ஊட்டி:நீல­கிரி மாவட்ட கூட்­டு­றவு தொழிற்­சா­லை­களில், தேயிலை கொள்­மு­த­லில், ‘கோட்டா’ முறை அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால், நாளொன்­றுக்கு, 3 லட்­சம் கிலோ பசுந்­தே­யிலை வீணாகி வரு­கிறது.
நீல­கிரி மாவட்­டத்­தில், 16 கூட்­டு­றவு தேயிலை தொழிற்­சா­லை­கள் செயல்­ப­டு­கின்­றன. இவற்­றில் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள, 30 ஆயி­ரம் விவ­சா­யி­கள்,தங்­க­ளது தோட்­டத்­தில் பறிக்­கும் பசுந்­தே­யி­லையை அந்­தந்த கூட்­டு­றவுதொழிற்­சா­லைக்கு வினி­யோ­கித்து வரு­கின்­ற­னர். நடப்­பாண்டு கோடை மழை அதி­க­ள­வில் பெய்­த­தால், பசுந்­தே­யிலை வரத்து அதி­க­ரிக்க துவங்­கி­யது.மே முதல் வாரத்­தி­லி­ருந்து, பெரும்­பா­லான கூட்­டு­றவு தொழிற்­சா­லை­களில் நாளொன்­றுக்கு, 25 ஆயி­ரம் கிலோ பசுந்­தே­யிலை கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது. கடந்த மூன்று நாட்­க­ளாக பசுந்­தே­யிலை கொள்­மு­தல், 55 ஆயி­ரம் கிலோவை எட்­டி­யது.
இந்­நி­லை­யில், கூட்­டு­றவுதொழிற்­சா­லை­க­ளின், பசுந்­தே­யிலை அரவை திறன், நாளொன்­றுக்கு, 25 ஆயி­ரம் கிலோ மட்­டுமே என்­ப­தால், தற்­போது அதி­க­ரித்­துள்ள பசுந்­தே­யிலை முழு­வ­தை­யும் கொள்­மு­தல்செய்ய முடி­யாத சூழ்­நிலை நிர்­வா­கங்­க­ளுக்கு ஏற்­பட்­டு உள்­ளது.நேற்று முதல் குறிப்­பிட்ட அள­வில் பசுந்­தே­யிலை வாங்­கும் நோக்­கில் மஞ்­சூர், பிக்­கட்டி, எடக்­காடு உட்­பட பெரும்­பா­லான கூட்­டு­றவு தொழிற்­சா­லை­களில், ‘கோட்டா’ முறை அம­லா­னது. நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக, 3 லட்­சம் கிலோ பசுந்­தே­யிலை, தோட்­டத்­தில் வீணாகி வரு­கிறது.
இம்­மா­தம் இறுதி வரை, இம்­முறை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தால், சரா­ச­ரி­யாக, 30 முதல், 40 லட்­சம் கிலோ பசுந்­தே­யிலை, தோட்­டத்­தில் வீணா­கும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.கூட்­டு­றவு தொழிற்­சாலை நிர்­வாக இயக்­கு­னர் கண­பதி கூறு­கை­யில், ‘‘பசுந்­தே­யிலை கொள்­மு­தல் வழக்­கத்தை விட அதி­க­ரிப்­பால், ‘கோட்டா’ முறை அமல்­ப­டுத்­தி­யுள்­ளோம். வரத்து குறை­யும் வரை இம்­முறை தொட­ரும்,’’ என்­றார்.
அரவை திறனை அதிகரிக்க வேண்டும்!
கூட்­டு­றவு தொழிற்­சா­லை­களை மேம்­ப­டுத்தி, கட்­ட­மைப்பு வச­தியை ஏற்­ப­டுத்தி, அரவை திறனை அதி­கப்­ப­டுத்­தி­னால் மட்­டுமே, வரத்து அதி­க­ரிக்­கும் சம­யத்­தில் பசுந்­தே­யிலை முழு­வ­தை­யும் கொள்­மு­தல் செய்ய முடி­யும். ஆனால், பல ஆண்­டு­க­ளாக வரத்து அதி­க­ரிக்­கும் காலத்­தில், ‘கோட்டா’ முறை அமல்­ப­டுத்­து­வ­தால் பல லட்­சம் கிலோ பசுந்­தே­யிலை வீணா­கிறது.
விவ­சா­யி­க­ளுக்கு பல கோடி ரூபாய் நஷ்­டம் ஏற்­ப­டு­கிறது. ஆண்டு தோறும் தொடர்­க­தை­யா­கும் கோட்டா முறைக்கு நிரந்­தர தீர்வு ஏற்­ப­டுத்த, இயந்­தி­ரங்­க­ளின் அரவை திறனை அதி­க­ரிக்க, அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)