பதிவு செய்த நாள்
16 மே2018
00:35
நாமக்கல்:வட மாநிலங்களில் விலை உயர்வால், நாமக்கல் மண்டலத்தில், முட்டைக்கோழி கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.தமிழக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும். இதன் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். அதன்படி, ஏப்., 1ல், 63; 20ல், 68; மே, 2ல், 73; 12ல், 68; நேற்று, மூன்று ரூபாய் உயர்த்தி, 71 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:முட்டைக்கோழிகள், கர்நாடகாவுக்கு, 60 சதவீதம்; கேரளாவுக்கு, 40 சதவீதம் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஆந்திரா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், டில்லி ஆகிய மாநிலங்களில் கொள்முதல் விலை, ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது.
மேலும், நாமக்கல் மண்டலத்தில், இருப்பு வைக்கப்பட்டிருந்த, 20 லட்சம் கோழிகளும் விற்பனையாகி விட்டன. முட்டை விலை உயர்ந்து வருவதால், கோழிகளை விற்பனை செய்ய, பண்ணையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால், முட்டைக்கோழி விலை உயர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|