மாம்பழம் பழுக்க வைக்க ரசாயன, ‘ஸ்ப்ரே’ மாம்பழம் பழுக்க வைக்க ரசாயன, ‘ஸ்ப்ரே’ ...  3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு மதிப்பீடு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு ... ...
மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ மோசடி நடைபெற வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
00:44

மாநி­லத்­துக்­குள், ‘இ – வே பில்’ நடை­முறை அறி­மு­க­மான பின், தமி­ழ­கத்­தில் மோசடி நடை­பெற வாய்ப்பு உள்­ளது என, அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ள­னர்.மாநி­லங்­க­ளுக்­கி­டையே, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ மூலம் அனு­மதி பெறும், இ – வே பில், நாடு முழு­வ­தும் ஏப்.,1ல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது.
மாநி­லத்­துக்கு உள்­ளேயே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, இ – வே பில் பெறும் முறை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.இந்த முறை, கர்­நா­ட­கத்­தில், ஏப்., 1 முத­லும், இதர மாநி­லங்­களில் ஏப்., 15 முத­லும் படிப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. அனைத்து மாநி­லங்­களும், ஜூன் மாதம் முதல் கண்­டிப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. 18 மாநி­லங்­கள் இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்தி உள்ளன.
இது குறித்து, வணிக வரித் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:தமி­ழ­கத்­தில், ஜூன், 2 முதல், மாநி­லத்­துக்­குள் சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, இன்ட்ரா ஸ்டேட், இ – வே பில் பெறும் முறை செயல்­பாட்­டுக்கு வரு­கிறது. இதன் பின், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் எடுத்­துச் செல்­லும் சரக்­கு­க­ளுக்கு, கண்­டிப்­பாக, இ – வே பில் பெறு­வது அவ­சி­யம்.
தற்­போது, மாநி­லங்­க­ளுக்­கி­டையே சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, நாள் ஒன்­றுக்கு, 60 ஆயி­ரம் இ – வே பில்­கள் பதி­வா­கின்றன. மாநி­லத்­துக்­குள் நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது, ஒன்­றரை லட்­சம் வரை பதி­வா­கும் என, எதிர்­பார்க்­கி­றோம்.
மாநி­லங்­க­ளுக்­கி­டையே, இ – வே பில் பெறு­வ­தில், இது­வரை எங்­க­ளுக்கு எந்­தப் புகா­ரும் வர­வில்லை. ஆனால், மாநி­லத்­துக்­குள் அறி­மு­க­மான பின், இதில், மோசடி நடை­பெற அதிக வாய்ப்பு இருக்­கிறது.இதற்­காக உள்ள ரோந்து குழுக்­கள், இ – வே பில் சரி­பார்ப்பு பணி­யில் ஈடு­ப­டு­வர்.
இது­வரை, இ – வே பில் பெறா­த­வர்­க­ளுக்கு எந்த அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­வில்லை. ஜூன் மாதத்­துக்­குப் பின், இ – வேல் பில் பெறா­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு அதி­கா­ரி­கள் கூறி­னர்.
மாநி­லங்­க­ளுக்­கி­டையே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, 21 லட்­சம் இ – வே பில்­கள் இது­வரை தமி­ழ­கத்­தில் பதி­வாகி உள்ளன. ஏப்­ரல் முதல் இந்த இ – வே பில் பதிவு கணக்­கி­டப்­பட்டு வரு­கிறது. சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு 60 ஆயி­ரம் இ – வே பில்­கள் தமி­ழ­கத்­தில் பதி­வா­கின்றன.

–நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)