பதிவு செய்த நாள்
17 மே2018
01:34
புதுடில்லி : இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், 20 வங்கிகளின் வாராக் கடன், 32 சதவீதம் அதிகரித்து, 3.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஒன்பது வங்கிகள்; 11 தனியார் வங்கிகள் என, 20 வங்கிகளின் நிதிநிலை அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. அதில், இவ்வங்கிகள் அளித்துள்ள கடனில், வாராக் கடன், 7.17 சதவீதமாக உள்ளது தெரியவந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், இவ்வங்கிகளின் வாராக் கடன், 32.7 சதவீதம் உயர்ந்து, 3.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, 2016 -– 17ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 14.4 சதவீத அளவிற்கே இருந்தது.
புதிய வாராக் கடன் அதிகரிப்பில், பொது துறையைச் சேர்ந்த, யூனியன் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், தேனா பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன. தனியார் துறையில், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றில், புதிய வாராக் கடன் அதிகம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|