பதிவு செய்த நாள்
18 மே2018
00:42
புதுடில்லி : ‘நடப்பு, 2017- – 18ம் வேளாண் பருவத்தில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 27.95 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டும்’ என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கை: வரும், ஜூன் மாதத்துடன் முடிவடையும் நடப்பு வேளாண் பருவத்தில், நெல், கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் உற்பத்தி, 27.95 கோடி டன் என்ற, புதிய உச்சத்தை எட்டும். இது, 2016- – 17ம் வேளாண் பருவத்தில் உற்பத்தியான, 27.51 லட்சம் டன்னை விட, 44 லட்சம் டன் அதிகமாகும்.
இதே காலத்தில், நெல் உற்பத்தி, 10.97 கோடி டன்னில் இருந்து, 11.15 கோடி டன்னாக உயரும் என, தெரிகிறது. கோதுமை உற்பத்தி, 9.85 கோடி டன்னில் இருந்து, 9.86 கோடி டன்னாக அதிகரிக்கும். தானியங்கள் உற்பத்தி, 4.37 கோடி டன்னில் இருந்து, 4.48 கோடி டன்னாக உயரும். பருப்பு வகைகள் உற்பத்தி, 13.70 லட்சம் டன் அதிகரித்து, 2.31 கோடி டன்னில் இருந்து, 2.45 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பான பருவ மழை, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு போன்றவற்றால், உணவு தானிய உற்பத்தி உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|