பதிவு செய்த நாள்
18 மே2018
00:46
புதுடில்லி : ‘வால்மார்ட் – பிளிப்கார்ட் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படும்’ என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி, சில்லரை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், சில்லரை விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவர். அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை, மத்திய அரசு உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மின் வணிகத்தை முறைப்படுத்த, உடனடியாக, தேசிய மின் வணிக கொள்கையை அறிவிக்க வேண்டும். அதுவரை, வால்மார்ட் – பிளிப்கார்ட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, வால்மார்ட் இந்தியா நிறுவன விவகாரங்கள் பிரிவு தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறும்போது,‘‘வால்மார்ட், இந்தியாவில் பல ஆண்டுகளாக, சிறு விவசாயிகள் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்து, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. பிளிப்கார்ட் மூலம், இச்சேவை தொடரும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|