பதிவு செய்த நாள்
19 மே2018
01:32
புதுடில்லி : ‘நடப்பு மே மாதம், சில்லரை பணவீக்கம், 4.7 சதவீதமாக அதிகரிக்கும்’ என, ‘டன் அண்டு பிராட்ஸ்ட்ரீட்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தாண்டு, பருவமழை பொழிவு, வழக்கம் போல இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், தேவைப்பாடு அதிகரிக்கும். எனினும், பரவலான மழை பொழிவுக்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுவதால், பணவீக்கம் உயர வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதன் தாக்கம், பல்வேறு துறைகளில் எதிரொலிக்கும். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலை; டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவையும் பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்கும்.
இவற்றின் அடிப்படையில், நடப்பு மே மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், 4.6 – 4.7 சதவீதமாக உயரக்கூடும். மொத்த விலை பணவீக்கம், 3.6 – 3.8 சதவீதமாக அதிகரிக்கும். ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி, 6.5 – 7.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|