பதிவு செய்த நாள்
22 மே2018
00:50
மும்பை : கடன் பெறுவதற்கு தகுதியான, நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு கடன் தருவதில், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிகவும் பின்தங்கியுள்ளது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ‘டிரான்ஸ்யூனியன் சிபில்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 10 ஆண்டுகளில், வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ள, தகுதியுள்ள, 22 கோடி பேரில், 7.20 கோடி பேருக்குத் தான், சில்லரை கடன் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியோரில் பலர், வயது, வருவாய், கடன் வரலாறு போன்றவற்றில், விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருந்த போதிலும், அவர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படாமல் இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதனால், எஞ்சியோருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தில், கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் நன்கு உள்ளன. அதை, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், நுகர்வோர் சாதனங்கள் கடன் உள்ளிட்ட சில்லரை கடன்களில், அளப்பரிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|