பதிவு செய்த நாள்
22 மே2018
00:52
புதுடில்லி : கிங்பிஷர் உள்ளிட்ட, 18 நிறுவனங்கள், பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக, தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, 30ம் தேதி முதல், கிங்பிஷர் உள்ளிட்ட, 1௮ நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படும். இந்நிறுவன பங்குகள் மீது, வர்த்தகம் நடைபெறாது. மும்பை பங்குச் சந்தை, 11ம் தேதி, 200 நிறுவனங்களின் பங்குகள் மீதான வர்த்தகத்திற்கு, ஆறு மாதங்கள் தடை விதித்தது.
போலி நிறுவனங்களை துவக்கி, கறுப்பு பண பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி செயல்படாமல், பெயரளவில் இருந்த, இரண்டு லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்டில், 331 போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், நீண்ட காலம் செயல்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன. பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் நிறுவனங்களின், முழுநேர இயக்குனர்கள், நிறுவனர்கள் மற்றும் குழும நிறுவனம் ஆகியவை, 10 ஆண்டுகளுக்கு, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எவை எவை?
‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ், பிளித்திகோ, அக்ரோ டச் இண்டஸ்டிரிஸ், பிராட்காஸ்ட் இனிஷியேடிவ்ஸ், கிரெஸ்ட் அனிமேஷன் ஸ்டுடியோஸ், கே.டி.எல்., பயோடெக், கெம்ராக் இண்டஸ்டிரிஸ் அண்டு எக்ஸ்போர்ட்ஸ், லுமேக்ஸ் ஆட்டோமோட்டிவ் சிஸ்டம்ஸ், நிசான் காப்பர், ஸி ஆஸ்தர் சிலிகேட்ஸ், சூர்யா பார்மாசூடிக்கல்ஸ் உள்ளிட்ட, 18 நிறுவனங்கள், தேசிய பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|