பதிவு செய்த நாள்
23 மே2018
00:44
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2017 –-18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 7,718 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்து உள்ளது. முந்தைய, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில், இழப்பு, 2,416 கோடி ரூபாயாக இருந்தது.
முந்தைய, 2016 – -17ம் நிதியாண்டின், நான்காவது காலாண்டில், இவ்வங்கி, 2,815 கோடி ரூபாய் நிகர இழப்பை கண்டுஇருந்தது. அதேசமயம், இதே காலத்துடன் ஒப்பிடும் போது, மதிப்பீட்டு காலாண்டில், இவ்வங்கியின் வருவாய், 57,720 கோடியில் இருந்து, 68,436 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
வங்கியின் மொத்த வாராக் கடன், 6.90 சதவீதத்தில் இருந்து, 10.91 சதவீதமாக ஏற்றம் கண்டு உள்ளது. நிகர வாராக் கடன், 3.71 சதவீதத்தில் இருந்து, 5.73 சதவீதமாக உயர்ந்து உள்ளது. நிகர வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால், வங்கியின் இழப்பு அதிகரித்து உள்ளது. நேற்று, மும்பை பங்குச்சந்தையில், இவ்வங்கி பங்கின் விலை, 3.69 சதவீதம் அதிகரித்து, 254.15 ரூபாயில் முடிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|