பதிவு செய்த நாள்
25 மே2018
00:15
சென்னை : தனியார் துறையைச் சேர்ந்த, சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், 2017 – -18ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 18.04 சதவீதம் உயர்ந்து, 152.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 128.87 கோடி ரூபாயாக இருந்தது.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கியின் மொத்த வருவாய், 6.99 சதவீதம் வளர்ச்சி கண்டு, 925.75 கோடியில் இருந்து, 990.48 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. நிகர வட்டி வருவாய், 18 சதவீதம் உயர்ந்து, 311 கோடியில் இருந்து, 368 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன், 2.83 சதவீதத்தில் இருந்து, 3.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக் கடன், 1.71 சதவீதத்தில் இருந்து, 1.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, என்.காமகோடி கூறியதாவது: தனியார் துறையில், இதர வங்கிகளுடன் ஒப்பிடும் போது, சிட்டி யூனியன் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது. ஒட்டுமொத்த வங்கித் துறையின் வாராக் கடன் உயர்ந்து வருகிறது. ஆனால், எங்கள் வங்கியின் நிகர வாராக் கடன் குறைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம். வங்கிக்கு உள்ள, 800 – -900 கோடி ரூபாய் வாராக் கடனில், அதிகபட்ச தொகையை விரைந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், வங்கி, 18 – -20 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சிட்டி யூனியன் வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு, கடந்த நிதியாண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு, 30 சதவீதம் டிவிடெண்டு அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|