பதிவு செய்த நாள்
26 மே2018
00:34
மும்பை: நாட்டின் பருத்தி ஏற்றுமதி, நடப்பு, 2017 – -18 பருத்தி பருவத்தில், 75 லட்சம் பேல்களாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய பருத்தி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா, 2016- – 17 அக்., – செப்., வரையிலான பருத்தி பருவத்தில், 58.20 லட்சம் பருத்தி பேல்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஒரு பேல் என்பது, 170 கிலோவாகும்.நடப்பு, 2017 -– 18 பருத்தி பருவத்தில், அக்., – மே வரை, 63 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதனால், நடப்பு பருவத்தில், பருத்தி ஏற்றுமதி, 30 சதவீதம் அதிகரித்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 75 லட்சம் பேல்களை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சர்வதேச அளவில், பருத்தியின் தேவைப்பாடு அதிகரித்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற மதிப்பீடு காரணமாக, அந்நாட்டின் ஐ.சி.இ., விளைபொருள் முன்பேர சந்தையில், பருத்தி விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்திருப்பதால், அதன் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, வியட்னாம் நாடுகள், அதிக அளவில் இந்திய பருத்தியை இறக்குமதி செய்கின்றன. மேலும், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை விட, இந்திய பருத்தி, விலை குறைவாக உள்ளதும், அதன் ஏற்றுமதி அதிகரிக்க காரணம்.இந்தியா, ஒரு பவுண்டு பருத்திக்கு, சரக்கு போக்குவரத்து செலவு உட்பட, 84- – 86 சென்ட் என விலை நிர்ணயித்து, ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள், 92 சென்ட் என்ற விலையில் பருத்தியை அனுப்புகின்றன.இந்த வித்தியாசம் காரணமாக, இந்திய பருத்திக்கு, மவுசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வியட்னாம், வங்கதேசம் ஆகிய நாடுகள், இந்திய பருத்தியை அதிகம் இறக்குமதி செய்கின்றன.மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவும், வெளிநாடுகள், இந்திய பருத்தியை வாங்க துாண்டுதலாக உள்ளன. இந்தாண்டில் மட்டும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 6 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதனால், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு, இந்திய பருத்தியை இறக்குமதி செய்வது லாபகரமாக உள்ளது.உள்நாட்டிலும், பருத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த பருத்தி பருவத்தில், உள்நாட்டில், 3.24 கோடி பேல்கள் உற்பத்தியாகின. இது, நடப்பு பருவத்தில், 5.3 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி குறையும் : இந்தியா, உயர்தரமான நீள்இழை பருத்தியை, அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்கிறது. நாட்டின் பருத்தி இறக்குமதி, நடப்பு பருவத்தில், 30 லட்சம் பேல்களில் இருந்து, 12 லட்சம் பேல்களாக குறையும். இதனால், பல ஆண்டுகளுக்கு பின், நாட்டின் பருத்தி கையிருப்பு, 20 லட்சம் டன்னை விட, குறையும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|