பதிவு செய்த நாள்
08 ஜூன்2018
01:23
புதுடில்லி:சர்வதேச போட்டியில், பெண்கள் பாதுகாப்பிற்கான கையடக்க சாதனத்தை கண்டுபிடித்த, டில்லியைச் சேர்ந்த, 'லீப் வியரபிள்ஸ்' நிறுவனத்திற்கு, 6.70 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
அனு மற்றும் நவீன் ஜெயின், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்அதிபர்கள்.இவர்கள், பெண்கள் பாதுகாப்பிற்கான நவீன சாதனங்களை உருவாக்குவோரை ஊக்குவிக்க, 'அனு அண்டு நவீன் ஜெயின் பெண்கள் பாதுகாப்பு எக்ஸ்பிரைஸ்' என்ற போட்டியை, 2016, அக்டோபரில் அறிவித்தனர்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்கும் விதத்தில், மிக எளிமையான, கையடக்க சாதனமாகவும், 40 டாலர், அதாவது, ரூபாய் மதிப்பில், 2,௭௦௦க்குள் விலை இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதி.அதிலும் முக்கியமாக, அந்த சாதனம், இணைய தொடர்பின்றி, ஆபத்து சமயங்களில், 90 வினாடிக்குள், உதவி கோரி தகவல் அனுப்ப வேண்டும் என்பது முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியில், 18 நாடுகளைச் சேர்ந்த, 85 குழுக்கள் பங்கேற்றன. இதில், டில்லியைச் சேர்ந்த லீப் வியரபிள்ஸ் நிறுவனத்தின், 'சேபர் ப்ரோ' என்ற கையில் அணியும் சாதனம், மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டு, 10 லட்சம் டாலர் பரிசை தட்டிச் சென்றது.
டில்லியில், 2012ல், 'நிர்பயா'வுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தான், பெண்களுக்கான பாதுகாப்பு சாதனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உணர்வை எங்களுக்குள் விதைத்தது. இந்த சாதனத்தில், உரையாடலை பதிவு செய்யும் வசதியும் உள்ளதால், அதை பெண்கள் ஆதாரமாக பயன்படுத்த முடியும்.
தேர்வுக் குழு, டில்லியில் சிறிய சந்துகளிலும், வாகனங்களிலும் இந்த சாதனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து, முழு திருப்தி அடைந்தது. நாங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சாதனத்தின் மேம்பட்ட வடிவம் தான் சேபர் ப்ரோ. இதில் உள்ள பொத்தானை அழுத்தினால், அதனுடன் தொடர்பு உள்ள குழுக்களுக்கு செய்தி சேர்ந்து விடும்; பாதாள அறையிலும் இது இயங்கும்.
நிஹாரிகா ராஜீவ், நிறுவனர், லீப் வியரபிள்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|