பதிவு செய்த நாள்
13 ஜூன்2018
00:25
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, ஏப்ரலில், 4.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, மார்ச்சில், 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதமாக இருந்தது.கடந்த ஏப்ரலில், தயாரிப்பு, சுரங்கம் ஆகிய துறைகள் சிறப்பாக செயல்பட்டன.இதன் காரணமாக, தொழில் துறை உற்பத்தி, 4.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்கு, 77 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.ஏப்ரலில், தயாரிப்பு துறை, 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2.9 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், சுரங்கத் துறையின் உற்பத்தி, 3 சதவீதத்தில் இருந்து, 5.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், இதே காலத்தில், மின் உற்பத்தி, 5.4 சதவீதத்தில் இருந்து, 2.1 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த, 2017, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி, 25 மாதங்களில் இல்லாத அளவாக, 8.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|