பதிவு செய்த நாள்
14 ஜூன்2018
00:24
காரைக்குடி:காரைக்குடியில் உள்ள, ‘சிக்ரி’ நிறுவனத்தின் லித்தியம் அயான் பேட்டரியை, வர்த்தக ரீதியாக தயாரிப்பதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சிக்ரியும், பெங்களூரு, ‘ராசி சூரிய சக்தி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும், மத்திய தொழில்நுட்ப அமைச்சர், ஹர்ஷவர்த்தன் முன்னிலையில் கையெழுத்திட்டன.
அமைச்சர் கூறியதாவது:இந்தியா முதன் முதலில் லித்தியம் அயான் பேட்டரி உற்பத்தியை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் துவங்குகிறது. 2017ல் இவ்வகை பேட்டரி செல்களை சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.
இப்போது இந்த பேட்டரி உற்பத்தியை, பெங்களூரு ராசி சூரிய சக்தி நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்குகிறது. இதனால், காரீய அமில (லெட் ஆசிட்) மின்கல பயன்பாடு அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இருசக்கர வாகனம், கார், காது கேளாதோருக்கான கருவிகள், மருத்துவக் கருவிகள், யு.பி.எஸ்., அலைபேசி, தொலை தொடர்பு உள்ளிட்டவற்றுக்கான கருவிகளில் சக்தியை சேமிக்க இவ்வகை பேட்டரி பயன்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, பெங்களூரு தேசிய வானுார்தி ஆய்வக இயக்குனர் ஜிதேந்திர யாதவ், இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு ராசி குரூப் நிறுவன நிர்வாக இயக்குனர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|