பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
00:46
புதுடில்லி:‘நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 2018 – 19 சந்தை பருவத்தில், 1 கோடி பேல்களாக உயரும்’ என, இந்திய பருத்தி கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:இதர நாடுகளின் பருத்தியை விட, இந்திய பருத்தியின் விலை, 10 சதவீதம் குறைவாக உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பருத்தி, 1 பேல், முறையே, 54 ஆயிரம் ரூபாய் மற்றும் 58 ஆயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது. இந்திய பருத்தி, 46 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அதனால், இந்திய பருத்திக்கான தேவை அதிகரித்துள்ளது.வரும் செப்டம்பரில் முடிவடையும், நடப்பு, 2017 -– 18 சந்தை பருவத்தில், 70 லட்சம் பருத்தி பேல்கள் ஏற்றுமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே நிலவரப்படி, 62 லட்சம் பேல்கள் ஏற்கனவே ஏற்றுமதியாகி உள்ளன. இந்தாண்டு நவ., – டிச., 5 லட்சம் பேல் பருத்தி தேவை என, சீனா முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 2018 – 19 சந்தை பருவத்தில், 1 கோடி பேல்களாக உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.170 கிலோ பருத்தி, 1 பேல் என, அழைக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|