ஜி.எம்., – சி.எப்.ஓ.,வாக சென்னை திவ்யா தேர்வுஜி.எம்., – சி.எப்.ஓ.,வாக சென்னை திவ்யா தேர்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.98 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 67.98 ...
மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதமாக உயர்வு 14 மாதங்களில் காணாத உச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
00:51

புதுடில்லி:கடந்த,மே மாதம், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், 14 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 4.43 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
இது, ஏப்­ர­லில், 3.18 சத­வீ­த­மா­க­வும், கடந்த ஆண்டு மே மாதம், 2.26 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது.கச்சா எண்­ணெய் விலை­யேற்­றத்­தால், பெட்­ரோல், டீசல் விலை அதி­க­ரித்­து உள்­ளது. இதன் தாக்­கத்­தால், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு உயர்ந்து, பழங்­கள், காய்­க­றி­கள் உள்­ளிட்ட உண­வுப் பொருட்­கள் விலை, ஏற்­றம் கண்­டுள்­ளது.
உரு­ளை­கி­ழங்கு
மே மாதம், காய்­க­றி­கள்பண­வீக்­கம், 2.51 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, ஏப்­ர­லில், 0.89 சத­வீ­தம் பின்­ன­டை­வைக் கண்­டி­ருந்­தது.இதே காலத்­தில், எரி­பொ­ருள் மற்­றும் மின்­சார துறை­யின் பண­வீக்­கம், 7.85 சத­வீ­தத்­தில் இருந்து, 11.22 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.உரு­ளைக் கிழங்கு விலை, 67.94 சத­வீ­தத்­தில் இருந்து, 81.93 சத­வீ­தம் என்ற உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.
பழங்­கள் பண­வீக்­கம், இரட்டை இலக்க உயர்­வைக் கண்டு,15.40 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.அதே­ச­ம­யம், பருப்பு வகை­களில் பண­வாட்­டம்ஏற்­பட்­டுள்­ளது. மே மாதம், பருப்பு வகை­க­ளின் பண­வாட்­டம், 21.13 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­து உள்­ளது.மார்ச் மாதத்­திற்­கான மொத்த விலை பண­வீக்­கம், மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு, 2.47 சத­வீ­தத்­தில் இருந்து, 2.74 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது என, மத்­திய புள்­ளி­யி­யல் துறை தெரி­வித்­துள்­ளது.
இரு தினங்­க­ளுக்கு முன், மே மாதத்­திற்­கான சில்­லரை விலை பண­வீக்க புள்ளி விப­ரம் வெளி­யி­டப்­பட்­டது. அதில், நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, சில்­லரை பண­வீக்­கம், 4.87 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. பழங்­கள், காய்­க­றி­கள், எரி­பொ­ருள் ஆகி­ய­வற்­றின் விலை­யேற்­றத்­தால், சில்­லரை பண­வீக்­கம் உயர்ந்­துள்­ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி, சில்­லரை பண­வீக்­கத்­தின் அடிப்­ப­டை­யில், அதன் நிதிக் கொள்­கையை உரு­வாக்­கு­கிறது. கடந்த நான்கு மாதங்­க­ளாக பண­வீக்­கம் உயர்ந்­துள்­ளதை அடுத்து, அதன் இலக்கை, ரிசர்வ் வங்கி, 0.30 சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது.அதன் அடிப்­ப­டை­யில், ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, கடந்த, 6ம் தேதி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்தி, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது.
நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின், முதன் முறை­யாக, இந்த வட்டி உயர்த்­தப்­பட்­டு உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.பண­வீக்­கம் மேலும் உய­ரும் என்ற எதிர்­பார்ப்பு கார­ண­மாக, ஆக., 1ல் நடை­பெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தில், ரெப்போ வட்டி மேலும் உயர்த்­தப்­ப­ட­லாம் என, நிதிச் சேவை துறை­யி­னர் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

கச்சா எண்ணெய்
மொத்த விலை பண­வீக்­கம், 14 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 4.43 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. கடந்த, 2017, மார்ச்­சில், மொத்த விலை பண­வீக்­கம், அதி­க­பட்­ச­மாக, 5.11 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. அது முதல், இறக்­கம் கண்டு வந்த நிலை­யில், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றத்­தால், மொத்த விலை பண­வீக்­கம் உயர்ந்து வரு­கிறது.கடந்த ஏப்­ர­லில், ஒரு பேரல் கச்சா எண்­ணெய் விலை, 66 டால­ராக இருந்­தது. இது, தற்­போது, 74 டால­ராக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)