பதிவு செய்த நாள்
16 ஜூன்2018
00:53
புதுடில்லி:வங்கி சாரா நிதி நிறுவனமான, ஹிந்துஜா லேலண்டு பைனான்ஸ், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனமான, ஹிந்துஜா லேலண்டு பைனான்ஸ் நிறுவனம், வாகனக் கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவின், இரண்டாவது பெரிய வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான, அசோக் லேலண்டு, இந்த ஹிந்துஜா லேலண்டு பைனான்ஸ் நிறுவனத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.
இந்நிறுவனம், 2.19 கோடி பங்குகளை வெளியிட்டு, 500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியின் அனுமதி கிடைத்த பின், பங்குகளை வெளியிட்டு, தேவையான நிதியை இந்நிறுவனம் திரட்டிக் கொள்ளும்.இத்தகைய பங்கு வெளியீட்டுக்கு தேவையான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, யெஸ் செக்யூரிட்டீஸ்’ ஆகியவை மேற்கொள்ள இருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|