பதிவு செய்த நாள்
17 ஜூன்2018
00:30
நாமக்கல்: முட்டை உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும், சீதோஷண நிலை மாற்றத்தாலும், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், அதன் கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளது. வரும், மூன்று மாதங்களில் முட்டை உற்பத்தி, 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 1,200 கோழிப் பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்பவெப்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்) நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. மே, 21ல், 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, படிப்படியாக அதிகரித்தது.அதன்படி, 25ல், 405; 27ல், 410; 30ல், 415; ஜூன், 1ல், 420; 6ல், 425; 9ல், 430; 11ல், 435 என, 20 நாட்களில், 35 காசு விலை உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி சரிந்து வந்த நிலையில், பண்ணைகளில் அதிக அளவில் குஞ்சுகள் விடப்பட்டதால், உற்பத்தி அதிகரித்தது. அதன்படி தற்போது முட்டை உற்பத்தி, 3.50 கோடியாக உயர்ந்துள்ளது.மேலும், தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில், மழை பெய்து வருவதாலும், சீதோஷண நிலை மாற்றம் காரணமாகவும், நுகர்வு அதிகரித்துள்ளது.அதனால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையில் இனி மாற்றம் இல்லாமல், இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. வரும், மூன்று மாதங்களில் முட்டை உற்பத்தி மேலும், 5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|