கடன் வளர்ச்சியில் முன்னேற்றம்கடன் வளர்ச்சியில் முன்னேற்றம் ... ‘அன்மோல் இண்டஸ்ட்ரீஸ்’ பங்கு வெளியிட திட்டம் ‘அன்மோல் இண்டஸ்ட்ரீஸ்’ பங்கு வெளியிட திட்டம் ...
பஞ்சு விலை உயர்வுக்கு காரணமான சீனா – அமெரிக்கா வர்த்தக மோதல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2018
00:12

கோவை : பஞ்சு விலை கிடு­கி­டு­வென ஏறி வரு­வது, கோவை மற்­றும் சுற்­று­வட்­டார பகு­தி­களில் இயங்கி வரும் ஸ்பின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­களை கலக்­கத்­தில் ஆழ்த்­தி­யி­ருக்­கிறது.

எப்­போ­தும் ஒரு கண்டி (355.62 கிலோ) பஞ்­சின் விலை, 36 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து, 42 ஆயி­ரம் ரூபாய் வரை­யில் விற்­கும். ஆனால், தற்­போது ஒரு கண்டி பஞ்­சின் விலை, 49 ஆயி­ரம் ரூபாய்க்கு விற்­பனை ஆகிறது. இரு வாரங்­களில் மட்­டும், 4,000 ரூபாய் வரை­யில் விலை ஏறி­யி­ருக்­கிறது. இது­தான் ஸ்பின்­னிங் மில் அதி­பர்­க­ளின் கலக்­கத்­துக்கு கார­ணம்.

ஜவு­ளித்­து­றை­யில் உல­க­ள­வில் கோலோச்சி வரும் சீன நிறு­வ­னங்­கள், தங்­க­ளுக்கு தேவை­யான பஞ்சை எப்­போ­தும் அதி­க­ள­வில் இருப்பு வைத்­தி­ருக்­கும். சமீப ஆண்­டு­க­ளாக அங்கு இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பாடு கொண்டு வந்­த­தால், இருப்பு குறைய துவங்­கி­யது. அத­னால் சமீ­பத்­தில், பஞ்சு இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டு­களை சீன அரசு தளர்த்­தி­ உள்­ளது. சீனா, இறக்­கு­ம­தியை துவங்­கும் என்ற எதிர்­பார்ப்­பால், சர்­வ­தேச அள­வில் பஞ்­சின் விலை அதி­க­ரித்­துள்­ளது.

பஞ்சு விலை உயர்­வுக்கு இன்­னொரு கார­ண­மும் இருக்­கிறது. வர்த்­தக போட்­டி­யின் கார­ண­மாக, சீன பொருட்­க­ளுக்கு, அமெ­ரிக்க அதி­பர், டிரம்ப் அதிக வரி விதித்­தார். பதி­லுக்கு சீனா­வும், அமெ­ரிக்க பொருட்­க­ளுக்கு அதிக இறக்­கு­மதி வரி விதித்­தது. அமெ­ரிக்க பஞ்சை வாங்­கி­னால், சீன நிறு­வ­னங்­கள் அதிக வரி செலுத்த வேண்டி வரும்.எனவே, சீன நிறு­வ­னங்­கள் இந்­தி­யாவை நோக்கி கவ­னத்தை திருப்­பும் என்ற எதிர்­பார்ப்­பில், பஞ்சை இருப்பு வைத்­தி­ருக்­கும் வர்த்­த­கர்­கள், விலையை உயர்த்த துவங்­கி­விட்­ட­னர்.

தென்­னிந்­திய பஞ்­சா­லை­கள் சங்க (சைமா) செய­லர் செல்­வ­ராஜ் கூறி­ய­தா­வது: ஆண்­டு­தோ­றும் நவம்­பர் முதல் பிப்­ர­வரி வரை­யி­லான கால­கட்­டம் பருத்தி வரத்து காலம். அப்­போது பஞ்சு விலை சற்றே குறை­வாக இருக்­கும். அதன் பின்­னர், மூன்று மாதங்­கள் பஞ்­சின் விலை ஓர­ள­வுக்கு கட்­டுக்­குள் இருக்­கும். ஜூன் மாதத்­தில், விலை அதி­க­ரிக்­கும். அத­னால்­தான், இப்­போது விலை அதி­க­ரித்து இருக்­கிறது.

மீண்­டும் பருத்தி வரத்து துவங்­கி­ய­தும், விலை கட்­டுக்­குள் வரும். சர்­வ­தேச சந்­தை­யில் தற்­போது பஞ்­சின் விலை அதி­க­ரித்து இருப்­ப­தால், இங்­கும் விலையை அதி­க­ரித்­து­விட்­ட­னர். நமக்கு தேவை­யான பஞ்சு கையி­ருப்­பில் இருப்­ப­தால், தட்­டுப்­பாடு ஏற்­படும் என்று பயப்­பட தேவை­யில்லை. செப்­டம்­ப­ருக்கு பின், பஞ்சு விலை கட்­டுக்­குள் வரும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)