பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:23
கோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்தால், கிடங்கு துறை, 2021ல், 100 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான, ஜே.எல்.எல்., இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:மாநிலங்கள் இடையிலான வர்த்தக எல்லைக்கோட்டை, ஜி.எஸ்.டி., அகற்றியுள்ளது. அதனால், சரக்குகளை தடையின்றி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, பல நிறுவனங்கள், அவற்றின் சரக்கு போக்குவரத்து கொள்கையை மாற்றி அமைத்து வருகின்றன. அவற்றின் சரக்குகளை சுலபமாகவும், விரைவாகவும் வினியோகிக்க, அந்தந்த மாநிலங்களில், கிடங்குகளை ஏற்படுத்தி வருகின்றன.அவை, வரிச் சுமையை பெரிதாக கருதாமல், சரக்குகளை எளிதாக கொண்டு செல்வதற்கும், போக்குவரத்து வசதிக்கும் முக்கியத்துவம் அளித்து, கிடங்குகளை தேர்வு செய்கின்றன. இது தவிர, நாடு முழுவதும், பன்முக சரக்கு போக்குவரத்து பூங்காக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, சரக்குகளை பாதுகாப்பாக வைத்து, வினியோகிக்க உதவும் கிடங்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில், கிடங்கு துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி, 20 சதவீதமாக அதிகரிக்கும். புதிதாக, 25 பன்முக சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் உருவாகும்.நாட்டில், 2017 நிலவரப்படி, ‘ஏ – பி’ ரகங்கள் உட்பட, மொத்த கிடங்குகளின் பரப்பு, 14 கோடி சதுர அடியாக இருந்தது. இது, 2021ல், 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, 29.70 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலீடு : இந்தியாவில், 2018- – 2020ல், புதிய கிடங்கு வசதிகளை ஏற்படுத்த, 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஜே.எல்.எல்., இந்தியா ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|