பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:26
மும்பை : ‘‘கடன் பத்திர சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கம் விரைவில் சீராகும்,’’ என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை உயர்வால், சில மாதங்களாக, அரசு கடன் பத்திர முதலீட்டு வருவாய் அதிகரித்துள்ளது. 10 ஆண்டு கால வரம்புடன், 7.17 சதவீத வட்டியில் வெளியிடப்பட்ட, அரசு கடன் பத்திரங்கள், தற்போது, 7.83 சதவீதம் என்ற அளவில் கைமாறி வருகின்றன. இந்த ஏற்றத்திற்கு, அடிப்படை காரணம் எதுவும் இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கியின், வட்டி விகிதம் அதிகரிப்பு, உள்நாட்டு நிதி நிலையில் காணப்படும் இறுக்கம் போன்றவை, கடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்கு வழி வகுத்துள்ளன. விரைவில், நிலைமை சீராகி, வர்த்தகம் ஸ்திரமாகும். கடன் பத்திர சந்தை, இயல்பு நிலைக்கு திரும்பும். குறுகிய கால கடன் பத்திரங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. அதனால், மத்திய அரசு அதிக கடன் பத்திரங்களை வெளியிடும். கடந்த நிதியாண்டில், மத்திய அரசின் மொத்த கடன், 5.99 லட்சம் கோடிரூபாயில் இருந்து, 6.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|