செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும்செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும் ...  மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் துவக்க திட்டம் மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் ... ...
பண பரிவர்த்தனை கொள்கை; ‘வாட்ஸ் ஆப்’ தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
01:09

புது­டில்லி: இந்­தி­யா­வில், விரை­வில் துவக்­க­வுள்ள பணப் பரி­வர்த்­தனை சேவை தொடர்­பான விதி­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வ­தில், ‘வாட்ஸ் ஆப்’ நிறு­வ­னம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.
இது குறித்து, இந்­நிறுவனம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: மொபைல் போனில் தகவல்­கள், படங்­கள் ஆகி­ய­ வற்றை பகிர்ந்து கொள்ளும் வச­தியை, நிறு­வ­னம் வழங்கி வரு­கிறது. இதை­ய­டுத்து, விரை­வில் பணப் பரி­வர்த்­தனை சேவையை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது. இதற்­காக, வங்­கி­கள் உடன், ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­டுள்­ளது.கடந்த சில மாதங்­க­ளாக சோதனை அடிப்­ப­டை­யில், பணப் பரி­வர்த்­தனை சேவை நடை­பெற்று வரு­கிறது. இச்­சே­வை­யில், தக­வல் திருட்டு, பண மோசடி, தனி நபர் விப­ரங்­கள் கசிவு போன்ற இடர்ப்­பா­டு­கள் இல்­லா­மல், பாது­காப்­பான பணப் பரி­வர்த்­த­னைக்கு, கொள்­கை­கள், விதி­மு­றை­கள் ஆகி­யவை உரு­வாக்­கப் ­பட்­டுள்­ளன. தனி நபர் தக­வல் பாது­காப்பு மிக முக்­கி­ய­மா­னது என்­ப­தால், பணப் பரி­வர்த்­த­னை­யில் பரி­மா­றும், ‘டெபிட்’ கார்­டின் இறுதி ஆறு இலக்­கங்­களை எந்த காலத்­தி­லும் சேமிப்­ப­தில்லை என, வாட்ஸ் ஆப் கொள்கை முடிவு எடுத்­து உள்­ளது. அது­போல, யு.பி.ஐ., சேவை­யி­லும், ‘பின்’ எனப்­படும் சங்­கேத எண், சேகரிக்­கப்­பட மாட்­டாது. அதே­ச­ம­யம், பணப் பரி­வர்த்­த­னை­யில், தாய் நிறு­வ­ன­மான, ‘பேஸ்­புக்’ வசம் உள்ள கட்­ட­மைப்பு வச­தி­களை, வாட்ஸ் ஆப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும். பேஸ்­புக் நிறு­வ­ன­மும், பணப் பரி­வர்த்­தனை தகவல்­களை, வர்த்­தக நோக்­கில் பயன்­ப­டுத்­தாது. சேவை நிறு­வ­னம் என்ற வகை­யில், வாட்ஸ் ஆப் பய­ன­ரின், யு.பி.ஐ., சார்ந்த பணப் பரி­மாற்ற செயல்­களுக்கு மட்­டுமே பேஸ்புக் உத­வும்.பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான கொள்­கை­கள், விதி­மு­றை­கள் ஆகி­ய ­வற்றை மேம்­ப­டுத்­தும் பணி முடிந்­த­தும், வர்த்தக ரீதி­யி­லான சேவையை வாட்ஸ் ஆப் துவக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்தியாவில் மட்டும்... : பணப் பரி­வர்த்­தனை சேவை­யில் ஈடு­பட்­டுள்ள அனைத்து நிறு­வ­னங்­களும், அவற்­றின் தக­வல் தொகுப்பை, இந்­தி­யா­வில் உள்ள, ‘சர்வர்’களில் மட்­டுமே சேமிக்க வேண்­டும் என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்த விதி­முறையை, ‘வாட்ஸ் ஆப்’ நிறு­வ­னம் பின்­பற்­று­கிறதா எனக் கண்­கா­ணிக்­கு­மாறு, மத்­திய மின்னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப அமைச்சகம், தேசிய பணப் பரி­வர்த்­தனை கழ­கத்­திற்கு உத்­த­ர­விட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)