பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:19
புதுடில்லி:நாட்டில், தொழில் துவங்க எளிதாக உள்ள மாநிலங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம், இன்று வெளியிடுகிறது.மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும், உள்நாடு அல்லது வெளிநாட்டு தொழில் நிறுவனத்தினர், அதற்கான சாதக அம்சங்கள் உள்ளனவா என, முதலில் ஆராய்வர்.
நிலம் கையிருப்பு, அதன் விலை, மின் கட்டண சலுகை மற்றும் புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட, பல்வேறு பயன்பாடுகளுக்கு, விண்ணப்பித்த நாளில் இருந்து, அனுமதி தரப்படும் கால அளவு போன்ற அம்சங்களின்படி, நிறுவனங்கள் முதலீடு செய்வதில் முன்னுரிமை வழங்குகின்றன.
இது போன்ற, 100க்கும் மேற்பட்ட அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்களை வரிசைப்படுத்தி, தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. கடந்த, 2016க்கான பட்டியலில், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. இப்பட்டியலில், தமிழகம் பின்தங்கி இருந்தது.இந்நிலையில், 2017க்கான தரவரிசை பட்டியலை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம், இன்று வெளியிடுகிறது.
இதில், மீண்டும் முதலிடத்தை, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தக்கவைத்துக் கொள்ளுமா மற்றும் தமிழகம் முன்னேறுமா என்பது, இன்று தெரிந்துவிடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|