பதிவு செய்த நாள்
11 ஜூலை2018
00:41
கோவை:‘தாய்லாந்து நாட்டில், தொழில் துவங்குவதற்கான வாய்ப்பை, கோவை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என, அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை, ரேஸ்கோர்ஸ் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் (ஐ.சி.சி.ஐ.சி.,), கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடீசியா) மற்றும் இந்தோ தாய் சேம்பர் ஆப் காமர்ஸ் (ஐ.டி.சி.சி.,) அமைப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.ஐ.டி.சி.சி.,யின் முன்னாள் செயலர் தேவதாஸ் பேசுகையில், ‘‘கடந்தாண்டு மட்டும், இந்தியா – தாய்லாந்து இடையே, 820 கோடி அமெரிக்க டாலருக்கு, ஏற்றுமதி,- இறக்குமதி வர்த்தகம் நடந்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் மூலம், கோவையில் உற்பத்தி செய்யப்படும் பம்பு, ஜவுளி ரகங்கள் உட்பட பல பொருட்களை, தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும், குறைந்த விலையிலான விவசாய கருவிகள் உள்ளிட்ட பொருட்களை, இங்கு இறக்குமதி செய்து வர்த்தகம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்,’’ என்றார்.
ஐ.டி.சி.சி.,யின் தலைவர் பூல் பேசுகையில், ‘‘தாய்லாந்தில் தொழில் துவங்குவதற்கான உரிமம் அனைத்தும், ஒரே நாளில் கிடைத்து விடும். அங்கு தொழில் துவங்கினால், முதல் ஏழு ஆண்டு களுக்கு, வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை.
‘‘தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரி சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.‘‘இந்த வாய்ப்பை, கோவை தொழில் துறையினர் பயன்படுத்தி, அங்கு தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும்,’’ என்றார்.ஐ.சி.சி.ஐ.சி., தலைவர் வனிதா மோகன், கொடீசியா முன்னாள் தலைவர் சுந்தரம், ஐ.டி.சி.சி., முன்னாள் செயலர் தேவதாஸ், கொடீசியா தலைவர் ராமமூர்த்தி உட்பட, பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|