இணைய தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம்இணைய தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.58 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.58 ...
கைத்தறி, கைவினை பொருட்கள்: வரி குறையுமா? அடுத்த வாரம் ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
00:22

புதுடில்லி:கைத்­தறி துணி வகை­கள், கைவினை பொருட்­கள், ‘சானிட்­டரி நாப்­கின்’ உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, ஜி.எஸ்.டி.,யை குறைப்­பது குறித்து, அடுத்த வாரம் நடை­பெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில் பரி­சீ­லிக்­கப்­படும் என, தெரி­கிறது.
டில்­லி­யில், ஜி.எஸ்.டி., கவுன்­சி­லின், 28வது கூட்­டம், அதன் தலை­வர் அருண் ஜெட்லி தலை­மை­யில், வரும், 21ம் தேதி நடை­பெற உள்­ளது.இதில், வரி வரு­வா­யில் அதி­கம் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத பொருட்­க­ளின், ஜி.எஸ்.டி., குறைக்­கப்­படும் என, தெரி­கிறது.

கோரிக்கை

இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:பெரும்­பா­லான கைத்­தறி ஜவுளி வகை­கள், கைவினை பொருட்­கள், சானிட்­டரி நாப்­கின்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, ஜி.எஸ்.டி., 12 சத­வீ­த­மாக உள்­ளது. இதை முற்­றி­லு­மாக நீக்க வேண்­டும் என, கைத்­தறி துறை­யி­னர் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.இத்­து­டன், சில பொருட்­க­ளின் வரியை குறைக்க வேண்­டும் என­வும், தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, அமைப்பு சாரா துறை­யில் வேலை­வாய்ப்பை உரு­வாக்­க­வும், பொது சுகா­தா­ரம் சார்ந்த பொருட்­க­ளின் நுகர்வை அதி­க­ரிக்­க­வும் உத­வும் பிரி­வு­களில், வரி குறைப்பு அவ­சி­யம் என, வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.இந்த கோரிக்­கை­க­ளு­டன், ஒரு சில சேவை­க­ளுக்­கான வரியை குறைப்­பது குறித்­தும், கவுன்­சில் பரி­சீ­லிக்­கும் என தெரி­கிறது.

குறைப்பு

கடந்த, 2017 நவம்­ப­ரில், 28 சத­வீத வரி பிரி­வில் இருந்து, 178 பொருட்­கள் நீக்­கப்­பட்­டன. உண­வ­கங்­க­ளுக்­கான வரி, 5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது. இந்­தாண்டு, ஜன­வ­ரி­யில், 54 சேவை­க­ளுக்­கும், 29 பொருட்­க­ளுக்­கும் வரி குறைக்­கப்­பட்­டது.இவ்­வாறு, வரி குறைக்­கப்­பட்ட போதி­லும், கடந்த நிதி­யாண்­டில், ஒன்­பது மாதங்­களில், ஜி.எஸ்.டி., மூலம், 7.41 லட்­சம் கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­துள்­ளது. அதா­வது, சரா­ச­ரி­யாக, மாதம், 89,885 கோடி ரூபாய் வரி வரு­வாய் கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நடப்பு நிதி­யாண்­டில், ஏப்­ர­லில் வரி வசூல், 1.03 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு உயர்ந்­தது. இது, மே மற்­றும் ஜூன் மாதங்­களில் முறையே, 94,016 கோடி மற்­றும் 95,610 கோடி ரூபா­யாக உள்­ளது.எனவே, வரி வரு­வா­யில் அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத, அதே­ச­ம­யம், வேலை­வாய்ப்­பை­யும், நுகர்­வை­யும் அதி­க­ரிக்க உத­வும் பிரி­வு­களில், வரியை குறைக்­கவோ அல்­லதுநீக்­கவோ, ஜி.எஸ்.டி., கவுன்­சில் துணிந்து முடி­வெ­டுக்­கும் என, தெரி­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்க உள்ள முக்கிய அம்சங்கள்

* ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கலை மேலும் எளி­மை­யாக்­கும் வழி­முறை
* ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் உள்­ளீட்டு வரி பயனை பெறு­வ­தில் ஏற்­படும் தாம­தத்தை குறைப்­பது
* ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்தை, பொதுத் துறை நிறு­வ­ன­மாக மாற்­று­வது
* ஓராண்டு விற்­பனை – கொள்­மு­தல் விப­ரங்­க­ளு­டன் கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 9’ படி­வம் அறி­மு­கம்
* மாநி­லங்­க­ளின் வரி சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, மத்­தி­யில் ஒரே அமைப்பை ஏற்­ப­டுத்­து­வது
* இயற்கை எரி­வா­யுவை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வரு­வது
* ஜி.எஸ்.டி., பிரி­வு­களை, நான்­கில் இருந்து, மூன்று அல்­லது இரண்­டாக குறைப்­பது
* ஒரே நாடு; ஒரே சாலை வரி திட்­டம்
* ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு சலுகை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)