பதிவு செய்த நாள்
12 ஜூலை2018
11:02
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி புள்ளிவிபரம், பணவீக்க விபரம் உள்ளிட்டவைகள் இன்று வெளியிடப்படும் என்பதால் அந்நிய முதலீடுகளின் வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து 68.58 ஆக இருந்தது.முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.77 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வுடன் துவங்கி உள்ளதும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|