பதிவு செய்த நாள்
13 ஜூலை2018
00:40
விருதுநகர்:மூலப்பொருட்களின் விலை உயர்வால், மத்தாப்பு விலை, 35 சதவீதம் வரை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், 30க்கும் மேற்பட்ட கம்பி மத்தாப்பு தயாரிப்பு (ஸ்பார்க்லர்ஸ்) ஆலைகள் உள்ளன. மத்தாப்பு தயாரிக்க, அலுமினியம் பவுடர், பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு), ஈயம் பூசப்பட்ட கம்பிகள் தேவை. இப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மத்தாப்புகள் விலை, 35 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது.
‘பட்டாசு தடை கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வட மாநில வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.‘இதனால், மற்ற வியாபாரிகள் அடக்க விலையை விட குறைத்து கேட்கின்றனர். அதிகமாக இருப்பு வைக்க முடியாததால், நஷ்டத்திற்கு விற்கிறோம்’ என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
‘ரூபி ஸ்பார்க்லர்’ ஆலை உரிமையாளர், ராஜப்பன் கூறியதாவது:சென்ற ஆண்டு கம்பிகள் விலை, 1 டன், 55 ஆயிரம் ரூபாய்; தற்போது, 85 ஆயிரம் ரூபாய். அலுமினிய பவுடர் விலை, 1 கிலோ, 200ல் இருந்து, 275; பேரியம் நைட்ரேட், 55ல் இருந்து, 67 ஆக உயர்ந்துள்ளதால், மத்தாப்புகள் விலை உயரும்.
குழந்தைகள் விரும்பும்மத்தாப்புகள் முன்னர் குறைந்த விலையில் கிடைத்தன. மூலப்பொருட்களின் விலை உயர்விற்கான காரணத்தை கண்டறிந்து, பட்டாசு பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|