பதிவு செய்த நாள்
13 ஜூலை2018
00:42
புதுடில்லி:வருமான வரி, கலால், சுங்க வரிகள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில், மேல்முறையீடு செய்வதை குறைக்கும் நோக்கில், வழக்கு மதிப்பின் வரம்பு உயர்த்தப்படுகிறது.
இது குறித்து, மத்தியநிதியமைச்சராக, தற்காலிக பொறுப்பில் உள்ள பியுஷ் கோயல் கூறியதாவது:மேல்முறையீடுகடந்த, 2017, மார்ச் நிலவரப்படி, 7.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வரி வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதை குறைக்க, மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களில், மேல்முறையீடு செய்வதற்கான வழக்கு மதிப்பின் வரம்பு உயர்த்தப்படுகிறது.
தற்போது, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவற்றில், குறைந்தது, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வழக்குகள், மேல்முறையீட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த வரம்பு, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அதுபோல, உயர் நீதிமன்றங்களில், மேல்முறையீடு செய்வதற்கான வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
வாபஸ்
உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்வதற்கான வரம்பு, 25 லட்சத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இதன் மூலம், வரி நிர்வாகத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். நேர்மையானோர், சிறிய அளவில் வரி செலுத்துவோர் நிம்மதி அடைவர்.இந்த முடிவின்படி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் இருந்து, முறையே, 34, 48 மற்றும் 54 சதவீத வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
அதுபோல, கலால், சுங்க வரிகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.இதன் மூலம், நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், 41 சதவீதமும், நிலுவைத் தொகை, 5,600 கோடி ரூபாயும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|