பதிவு செய்த நாள்
13 ஜூலை2018
00:46
சென்னை:அசோக் லேலண்டு நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து, கனரக வாகனங்களுக்கான, ‘என் – தன் எரிபொருள் அட்டை’யை, சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.
இது குறித்து, அசோக் லேலண்டு மேலாண்மை இயக்குனர், வினோத் கே.தாசரி மற்றும் எச்.பி.சி.எல்., செயல் இயக்குனர், சுந்தரராமன் ஆகியோர், சென்னையில் நேற்று கூறியதாவது:அசோக் லேலண்டு நிறுவனம், எச்.பி.சி.எல்.,லின், ‘டிரைவ் ட்ரக் பிளஸ்’ திட்டத்துடன் இணைந்து, என் – தன் எரிபொருள் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை, சிறிய ரக கார்களுக்கான பிரீபெய்டு அட்டையை, எச்.பி.சி.எல்., வழங்கி வந்தது. தற்போது, அசோக் லேலண்டு உடன் இணைந்து, கனரக வாகனங்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த அட்டையில், மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள, 15 ஆயிரத்து, 200 எச்.பி., பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம்.
மேலும், இந்த அட்டை மூலம், சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தும் முறையையும், இதில் இணைக்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த அட்டையை, அசோக் லேலண்டு வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் பெறலாம். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து, எச்.பி., சில்லரை விற்பனை நிலையங்களிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|