பதிவு செய்த நாள்
15 ஜூலை2018
01:02
புதுடில்லி: பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, நிறுவன கணக்குகளைத் தணிக்கை செய்யும், ‘ஆடிட்டர்’களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
வணிக வங்கிகள், தர நிர்ணய நிறுவனங்கள் உள்ளிட்டவை, 'செபி'யின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
ஆனால், இது போன்ற கட்டுப்பாட்டு அமைப்பு எதுவும், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் எனப்படும் ஆடிட்டர்கள், நிறுவனச் செயலர்கள், மதிப்பீட்டாளர்கள், கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றுக்கு இல்லை.
இதனால், பல நிறுவனங்கள், நிதிநிலை அறிக்கையில் மோசடி செய்து, வங்கிகள், நிதி நிறுவனங்களை ஏமாற்றுகின்றன. இந்நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்களும் ஏமாற்றப்படுகின்றனர்.
இதைத் தவிர்க்க, நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் ஆடிட்டர்கள், ஆடிட் நிறுவனங்கள், சொத்து மதிப்பீட்டாளர்கள் ஆகியோரை, பங்குச் சந்தை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையேற்று, பங்குச் சந்தை சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்ய, செபி முடிவு செய்து
உள்ளது.
இதற்கான வரைவு விதிமுறை, செபி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
l தவறான நிதிநிலை அறிக்கை அல்லது சான்று தரும், ஆடிட்டர் அல்லது ஆடிட் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு உள்ளது
l ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை அல்லது கணக்கு தாக்கலுக்கு சான்றொப்பம் அளிக்கும் ஆடிட்டர், அவற்றில் உள்ள விபரங்கள் உண்மையானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
l சட்ட விதிகளுக்கு புறம்பாக ஒரு நிறுவனம் நடப்பது தெரியவந்தால், அதன் ஆடிட் குழு அல்லது கண்காணிப்பு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஆடிட்டரையே சாரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|