பதிவு செய்த நாள்
16 ஜூலை2018
00:51
வருமான வரித்துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் இ – மெயில்களை அனுப்பி மோசடி ஆசாமிகள் ஆன்லைனில் வலை விரிப்பது குறித்து வரித்தாக்கல் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிதி, ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
இ – மெயில் அல்லது குறுஞ்செய்தி மூலம் மோசடி வலை விரித்து, வங்கி கணக்கு அல்லது கிரெடிட் கார்டு தொடர்பான விபரங்களை பெற்று, பணத்தை அபகரிக்கும் செயல், ‘பிஷிங்’ எனப்படும் இணைய மோசடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது,
பொதுவாக நம்பகமான அமைப்புகளிடம் இருந்து வந்து இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி, ஏமாற்றுவது இதன் உத்தியாக அமைகிறது. உதாரணத்திற்கு, முன்னணி வங்கியின் முகவரி போன்ற தளத்தில் இருந்து இ – மெயில் அனுப்பப்பட்டிருக்கும்.
கவனமாக பார்த்தால் தான் அது போலி முகவரி எனத்தெரியும்.இதே போல, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலத்தில், வருமான வரித்துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் மெயிலை மோசடி ஆசாமிகள் அனுப்பி வைக்கின்றனர்.
வருமான வரி கணக்கீட்டில் பிழை இருக்கிறது, எனவே ரிபண்ட் செய்ய அணுகவும் என்பது போல இந்த மெயில்கள் அமைந்திருக்கலாம். இவற்றை நம்பி, ‘கிளிக்’ செய்தால் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படலாம்.ஆனால், வருமான வரித்துறை யாரிடமும் வங்கி கணக்கு அல்லது கிரெடிட் கார்டு போன்ற தகவல்களை இவ்வாறு கோருவதில்லை என்பதால், இத்தகைய மோசடி மெயில்கள் குறித்து வரித்தாக்கல் செய்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|