மியூச்சுவல் பண்டு முதலீடு மும்பையை விஞ்சிய சென்னை மியூச்சுவல் பண்டு முதலீடு மும்பையை விஞ்சிய சென்னை ... அதிகரித்து வரும் அச்ச உணர்வு அதிகரித்து வரும் அச்ச உணர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
02:31

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான நிப்டி, கடந்த வாரம், 270 புள்­ளி­கள் உயர்ந்து, 11,076 புள்­ளி­களை எட்­டி­யது. கடந்த ஆறு வார காலத்­தில் சீரான போக்­குக்கு பிறகு, சந்­தை­யில் பங்­கு­க­ளின் விலை கடந்த வாரம் உயர்ந்­தது.
இருப்­பி­னும், ரியல் எஸ்­டேட், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், மூல­தன பொருட்­கள் மற்­றும் சில துறை பங்­கு­களில் சரி­வில் வர்த்­த­கம் நடை­பெற்­றது.நிப்டி இண்­டெக்­ஸில் உள்ள, 50 பங்­கு­களில், 5 பங்­கு­கள் கடந்த வாரத்­தில் வர­லாற்று உச்­சத்தை எட்­டின. மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ் 30ல், ரிலை­யன்ஸ் மற்­றும் இன்­போ­சிஸ் பங்­கு­கள் விலை உயர்ந்து வர்த்­த­க­மா­கின.
டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, தொழில்­நுட்ப துறை சார்ந்த பங்­கு­கள் வரு­மா­னம் அதி­க­ரிக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தில், பங்­கு­கள் விலை உயர்ந்து காணப்­பட்­டன.கடந்த வாரங்­களில் ஏற்­பட்ட கச்சா எண்­ணெய் விலை சரிவு, பங்கு சந்­தை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது. அமெ­ரிக்கா -– சீனா இடை­யே­யான வர்த்­தக மோத­லில், ஒரு சுமுக உடன்­ப­டிக்கை ஏற்­ப­ட­லாம் என்ற கருத்து நில­வி­யது.
மேலும், வெளி­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளின் கொள்­மு­தல், கடந்த புதன்­கி­ழமை அன்று அதி­க­ரித்­தது. இதன் கார­ண­மா­க­வும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது.கடந்த புதன் அன்று, அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 636.27 கோடி ரூபாய்க்­கும், உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 15.33 கோடி ரூபாய்க்­கும் நேரடி கொள்­மு­தல் செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
மேலும், தென்­மேற்கு பரு­வ­மழை இது­வரை சரா­ச­ரிக்கு மேல் பெய்­த­தா­லும், வரும் காலாண்­டில் நிறு­வ­னங்­க­ளின் ஆதா­யம் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பி­லும் சந்தை வலுப்­பெற்­றது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி, முதல் ரெசிஸ்­டென்ட், 11,170 மற்­றும், 11,300 ஆகும். சப்­போர்ட், 10,905 ஆகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)